விருதுநகரில் தனியார் ஆஸ்பத்திரி பெண் ஊழியர் மாயம்
விருதுநகர்:
விருதுநகர் அருகே உள்ள வடக்கம்பட்டியைச் சேர்ந்தவர் மணிவண்ணன். இவரது மகள் பிரியதர்ஷினி (வயது 19). இவர் விருதுநகரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் லேப் டெக்னீசியனாக வேலை பார்த்து வந்தார். இதற்காக பிரியதர்ஷினி ஆஸ்பத்திரி விடுதியில் தங்கியிருந்தார்.
சில நாட்களுக்கு முன்பு பிரியதர்ஷினி வீட்டுக்கு செல்வதாக கூறிச் சென்றார். ஆனால் அவர் வீட்டுக்கு செல்லாமல் மாயமானார். பல இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
இது குறித்து பிரியதர்ஷினியின் தாய் சாந்தி கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.
விருதுநகர் அருகே உள்ள மீசலூரைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 65), விவசாயியான இவர் கடந்த சில மாதங்களாக மனநிலை பாதிக்கப்பட்டு இருந்தார்.
சம்பவத்தன்று வீட்டில் இருந்த கண்ணன் திடீரென மாயமானார். அவரை தேடியும் பலன் இல்லை. இது குறித்து கண்ணன் மனைவி தனலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.