செய்திகள்

பாலமேடு அருகே குளிர்பான பாட்டில் மூடியை விழுங்கிய குழந்தை பலி

Published On 2017-08-23 11:20 GMT   |   Update On 2017-08-23 11:21 GMT
பாலமேடு அருகே 9 மாத குழந்தை வீட்டில் கிடந்த குளிர்பான பாட்டில் மூடியை எடுத்து விழுங்கியது. சிறிது நேரத்தில் குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்தது.

அலங்காநல்லூர்:

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே உள்ள பாலமேடு போலீஸ் சரகம் எர்ரம்பட்டியை சேர்ந்தவர் கண்ணன். இவரது 9 மாத மகள் பத்மஸ்ரீ. சம்பவத்தன்று பத்மஸ்ரீ வீட்டில் கீழே கிடந்த குளிர்பான பாட்டில் மூடியை எடுத்து விழுங்கியது. சிறிது நேரத்தில் குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

பதறிப்போன பெற்றோர் பதம்ஸ்ரீயை மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட பதம்ஸ்ரீயின் தொண்டையில் சிக்கியிருந்த மூடியை டாக்டர்கள் அகற்ற முயன்றனர். அதற்குள் குழந்தை பத்மஸ்ரீ பரிதாபமாக இறந்தது.

பாலமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News