செய்திகள்

விராட்டிப்பத்தில் பல்கலைக்கழக அதிகாரி வீட்டில் 25 பவுன் நகை கொள்ளை

Published On 2017-08-22 10:55 GMT   |   Update On 2017-08-22 10:55 GMT
பல்கலைக்கழக அதிகாரி வீட்டில் புகுந்து 25 பவுன் நகையை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

மதுரை:

மதுரை அருகே உள்ள விராட்டிப்பத்தை சேர்ந்தவர் அழகர்சாமி (வயது51). மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் கண்காணிப்பாளராக பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்றவர்.

இவரது மகன் சென்னையில் பணிபுரிந்து வருகிறார். இவரது வீடு விராட்டிப்பத்தில் தேனி மெயின்ரோட்டில் உள்ளது.

சம்பவத்தன்று இவரது மனைவியும், மகளும் ஆத்திக் குளத்தில் உள்ள மாமியார் வீட்டுககு சென்று விட்டனர். அழகர்சாமி கொடுமுடி கோவிலுக்கு சென்றார்.

திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 25 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து எஸ்.எஸ்.காலனி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை திருடிய மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News