செய்திகள்

திருநின்றவூர் அருகே ஆட்டோ டிரைவரிடம் வழிப்பறி செய்த 2 பேர் கைது

Published On 2017-08-22 06:45 GMT   |   Update On 2017-08-22 06:45 GMT
திருநின்றவூர் அருகே ஆட்டோ டிரைவரிடம் வழிப்பறி செய்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருநின்றவூர்:

பட்டாபிராமை சேர்ந்தவர் விநாயகம். ஆட்டோ டிரைவர். இவர் ஆட்டோவில் நடுக்குப்பம் பகுதியில் சென்ற போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் விநாயகத்தை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி செல்போன், ரூ.1000ஐ வழிப்பறி செய்து தப்பி விட்டனர்.

இது குறித்து திருநின்றவூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட பெரியபாளையத்தை சேர்ந்த ஹேமந்த், லட்சுமணனை கைது செய்தனர்.

Tags:    

Similar News