செய்திகள்

திருப்பாலைக்குடி அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

Published On 2017-08-21 13:01 GMT   |   Update On 2017-08-21 13:01 GMT
திருப்பாலைக்குடி அருகே விநாயகர் சதுர்த்தியையொட்டி அலங்கார வளைவு அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி மீது மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

ராமநாதபுரம்:

ராமநாதபுரம் மாவட்டம், திருப்பாலைக்குடி அருகே உள்ள மோர்ப்பண்ணையைச் சேர்ந்தவர் கந்தசாமி (வயது 35). இவருக்கு திருமணமாகி மனைவி, 2 பிள்ளைகள் உள்ளனர்.

கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனைவி மற்றும் பிள்ளைகள் தனியாக வசித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் கந்தசாமி மோர்ப்பண்ணை அருகில் விநாயகர் சதுர்த்தியையொட்டி அலங்கார வளைவு அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து திருப்பாலைக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

Tags:    

Similar News