செய்திகள்
விருதுநகரில் இளம்பெண் மீது தாக்குதல்: 2 பேர் கைது
விருதுநகரில் இளம்பெண்ணை தாக்கியதாக சித்தப்பா உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
விருதுநகர்:
விருதுநகர் மணிநகரைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகள் காயத்ரி (வயது 20). இவர்களுக்கும், முருகனின் தம்பி ரமேஷ்குமாருக்கும் சொத்து பிரச்சினை உள்ளது. இந்த சூழலில் நேற்று காலை வீட்டு முன்பு காயத்ரி முகம் கழுவிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு நின்ற ரமேஷ்குமார் மீது தண்ணீர் பட்டுவிட்டதாம். இதனால் ஆத்திரம் அடைந்த அவர் வாக்குவாதம் செய்தார். தொடர்ந்து ரமேஷ் குமார் தனது நண்பர் வீரபத்திரனுடன் சேர்ந்து காயத்ரியை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் காயத்ரி பலத்த காயம் அடைந்தார். தாக்குதல் குறித்து விருதுநகர் கிழக்கு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி ரமேஷ்குமார் மற்றும் வீரபத்திரனை கைது செய்தனர்.