செய்திகள்
தண்டையார்பேட்டையில் முதியோர் உதவித்தொகை கேட்டு தாசில்தார் அலுவலகம் முற்றுகை
தண்டையார்பேட்டையில் முதியோர் உதவித்தொகை கேட்டு தாசில்தார் அலுவலகத்தை 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் முற்றுகையிட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராயபுரம்:
தண்டையார்பேட்டை, புதுவண்ணாரப்பேட்டை, கொருக்குப்பேட்டை பகுதியில் உள்ள முதியவர்களுக்கு கடந்த 8 மாதமாக உதவித்தொகை வழங்கப்படவில்லை.
இதுகுறித்து அவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டபோது சரியான பதில் கூறவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி முதியோர்கள் பெண்கள் உள்பட சுமார் 100-க்கும் மேற்பட்டோர் தண்டையார்பேட்டை தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோஷங்கள் எழுப்பினர்.
இந்த போராட்டத்துக்கு ஆதரவாக தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினரும் பங்கேற்றனர்.
அவர்களிடம் போலீசாரும், அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தினர். உதவித் தொகை கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
இதனால் தண்டையார்பேட்டை தாசில்தார் அலுவலகம் இன்று காலை பரபரப்பாக காணப்பட்டது.
தண்டையார்பேட்டை, புதுவண்ணாரப்பேட்டை, கொருக்குப்பேட்டை பகுதியில் உள்ள முதியவர்களுக்கு கடந்த 8 மாதமாக உதவித்தொகை வழங்கப்படவில்லை.
இதுகுறித்து அவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டபோது சரியான பதில் கூறவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி முதியோர்கள் பெண்கள் உள்பட சுமார் 100-க்கும் மேற்பட்டோர் தண்டையார்பேட்டை தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோஷங்கள் எழுப்பினர்.
இந்த போராட்டத்துக்கு ஆதரவாக தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினரும் பங்கேற்றனர்.
அவர்களிடம் போலீசாரும், அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தினர். உதவித் தொகை கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
இதனால் தண்டையார்பேட்டை தாசில்தார் அலுவலகம் இன்று காலை பரபரப்பாக காணப்பட்டது.