செய்திகள்

பெரியபாளையத்தில் சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல்: பஸ் டிரைவர் கைது

Published On 2017-08-17 07:22 GMT   |   Update On 2017-08-17 07:22 GMT
பெரியபாளையத்தில் சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த பஸ் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
பெரியபாளைம்:

பெரியபாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் வடமதுரை கூட்டுச்சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவர், சப்-இன்ஸ்பெக்டர் சரவணனிடம் தகராறில் ஈடுபட்டனர். மேலும் தகாத வார்த்தைகள் பேசி கொலை மிரட்டல் விடுத்தார்.

விசாரணையில் அவர் வெங்கல் அருகே உள்ள மாம்பள்ளம் பகுதியை சேர்ந்த சசிக்குமார் என்பதும், சென்னை வியாசர்பாடியில் மாநகர பஸ் டிரைவராக பணியாற்றி வருவதும் தெரிந்தது.

இதையடுத்து சசிக்குமாரை போலீசார் கைது செய்தனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News