செய்திகள்

தர்மபுரி அருகே எலக்ட்ரீசியன் மனைவி தீக்குளித்து தற்கொலை

Published On 2017-08-11 09:44 GMT   |   Update On 2017-08-11 09:44 GMT
தர்மபுரி அருகே எலக்ட்ரீசியன் மனைவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தர்மபுரி:

தர்மபுரி அருகே சிவாஜி நகரைச் சேர்ந்தவர் காதர் எலக்ட்ரீசியன். இவரது மனைவி அமீனா (வயது 37). காதருக்கு குடிப்பழக்கம் இருப்பதால் சரிவர வேலைக்கு செல்லாமல் அடிக்கடி மதுகுடித்து விட்டு மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்தாக தெரிகிறது.

இந்த நிலையில் மீண்டும் அவர் குடித்து விட்டு அமீனாவிடம் தகராறில் ஈடுபட்டார். இதனால் மனமுடைந்த அவர் நேற்று தீடீரென்று வீட்டில் தனியாக இருந்தபோது உடலில் மண்எண்ணை ஊற்றி தீவைத்து கொண்டார். இதில் உடல் முழுவதும் தீப்பற்றி கொண்டது. இதனால் அலறி துடித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து அமீனாவை மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தர்மபுரி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News