செய்திகள்
திருபுவனை அருகே கிளி ஜோசியர் மர்ம மரணம்
திருபுவனை அருகே கிளி ஜோசியர் மர்மமான முறையில் மாரியம்மன் கோவில் திடல் அருகே இறந்து கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருபுவனை:
திருநெல்வேலி மாவட்டம் வீரமாநல்லூர் சர்ச் தெருவை சேர்ந்தவர் சுடலை (வயது60). இவர் கடந்த சில ஆண்டுகளாக திருபுவனை பகுதியில் தங்கி சுற்றியுள்ள பகுதிகளுக்கு சென்று கிளி ஜோசியம் பார்த்து வந்தார். இந்த நிலையில் கலிதீர்த்தாள்குப்பம் மாரியம்மன் கோவில் திடல் அருகே சுடலை மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் திருபுவனை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அலாவூதீன் உதவி சப்-இன்ஸ்பெக்டர் குமாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் வழக்குபதிவு செய்து வயது முதிர்ச்சியினால், நோய் கொடுமையினால் சுடலை இறந்தாரா? அல்லது அதிக குடிபோதையில் இறந்தாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.