செய்திகள்

சமயநல்லூர் அருகே தீயில் கருகி பெண் மரணம்

Published On 2017-07-25 12:10 GMT   |   Update On 2017-07-25 12:10 GMT
சமயநல்லூர் அருகே வீட்டில் இருந்த பெண் உடல் கருகி இறந்தார். அவர் எப்படி இறந்தார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாடிப்பட்டி:

மதுரை மாவட்டம் சமய நல்லூர் அருகே உள்ள காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சூசை மாணிக்கம் பந்தல் அமைப் பாளர். இவரது மனைவி எமல்டாமேரி (வயது 45).

நேற்று சூசைமாணிக்கம் வீட்டின் மாடியில் உள்ள அறையில் தூங்கசென்றார். எமல்டா மேரி வீட்டில் தூங்கினார்.

நள்ளிரவு நேரத்தில் திடீரென்று எமல்டா மேரியின் அலறல் சத்தம் கேட்டது. இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சூசைமாணிக்கம் உடனே கீழே இறங்கி சென்றார். அப்போது எமல்டா மேரி உடல் முழுவதும் தீ பரவிய நிலையில் அலறி துடித்தார். காப்பற்ற முயன்றும் முடியவில்லை. சிறிது நேரத்தில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் சமயநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து எமல்டா மேரி மண் எண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என? விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News