செய்திகள்
சிவகாசி அருகே தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து
சிவகாசி அருகே தீப்பெட்டி ஆலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது . உடனே அங்கிருந்த தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.
சிவகாசி:
சிவகாசி அருகே உள்ள நாரணாபுரம் முத்தமிழ் நகரைச் சேர்ந்தவர் அதிபதி. இவர் அதே பகுதியில் தீப் பெட்டி தொழிற்சாலை நடத்தி வருகிறார். நேற்று இரவு தீப்பெட்டி அட்டைக்கு லேபிள் ஒட்டு வதற்காக பசை காய்ச்சப்பட்டது. அப்போது எதிர் பாராதவிதமாக அருகில் இருந்த கழிவு பொருட்களில் தீப்பற்றியது. சிறிது நேரத்தில் தீ மளமளவென பரவியது. உடனே அங்கிருந்த தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.
தீ விபத்து குறித்து தகவல் அறிந்த சிவகாசி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடம் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இதுகுறித்த புகாரின் பேரில் சிவகாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.