செய்திகள்

ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் தேர்வு: கவர்னர் வித்யாசாகர் ராவ் வாழ்த்து

Published On 2017-07-21 04:04 GMT   |   Update On 2017-07-21 04:04 GMT
இந்திய ஜனாதிபதியாக தேர்வாகியுள்ள ராம்நாத் கோவிந்துக்கு, தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
சென்னை:

இந்திய ஜனாதிபதியாக தேர்வாகியுள்ள ராம்நாத் கோவிந்துக்கு, தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ் வாழ்த்து தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-

இந்திய நாட்டின் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டதற்காக தங்களுக்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.

கவர்னராக தாங்கள் பணியாற்றிய சமயத்தில் உங்களது சட்ட ரீதியிலான விஷயங்களில் தங்களது அறிவாற்றல், தங்களது அனுபவம் ஆகியவை தற்போது இந்திய பாராளுமன்றத்துக்கே பயன்படப்போகிறது. அது நாட்டின் வளர்ச்சிக்கும் பயன்படட்டும்.

உங்களது சேவை நாட்டு மக்களுக்கு தேவையாக இருக்கட்டும் என்று நான் வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
Tags:    

Similar News