செய்திகள்

தஞ்சையில் ரெயில் முன் பாய்ந்து ஆட்டோ டிரைவர் தற்கொலை

Published On 2017-07-17 11:07 GMT   |   Update On 2017-07-17 11:08 GMT
தஞ்சையில் ரெயில் முன் பாய்ந்து ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தஞ்சாவூர்:

தஞ்சை ரெட்டிப்பாளையம் அன்னை சிவகாமி நகரை சேர்ந்தவர் அருண்பிரசாத் (வயது 20). ஆட்டோ டிரைவர். இவர் நேற்று மாலை ரெட்டிப் பாளையத்தில் அந்த வழியாக சென்ற ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தஞ்சை ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்தற்கு விரைந்து சென்று அருண்பிரசாத் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து அருண்பிரசாத் காதல் தோல்வி காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு எதுவும் காரணமா? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News