செய்திகள்

பீளமேடு அருகே தண்டவாளத்தில் தலைவைத்து வாலிபர் தற்கொலை

Published On 2017-06-28 10:31 GMT   |   Update On 2017-06-28 10:32 GMT
பீளமேடு அருகே ரெயில் தண்டவாளத்தில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் தலைவைத்து படுத்தார். அப்போது அந்த வழியாக வந்த ரெயில் அந்த வாலிபர் மீது ஏறி இறங்கியதில் பரிதாபமாக இறந்தார்.

கோவை:

கோவை பீளமேடு ரெயில்நிலையம் அருகே தொழில்நுட்ப பூங்கா உள்ளது. இந்த பூங்கா முன்புறம் உள்ள ரெயில் தண்டவாளத்தில் இன்று காலை திடீரென 35 வயது மதிக்கதக்க வாலிபர் தலைவைத்து படுத்தார்.

அப்போது அந்த வழியாக வந்த ரெயில் அந்த வாலிபர் மீது ஏறி இறங்கியது. இதில் அந்த வாலிபர் சம்பவஇடத்திலேயே தலை துண்டாகி பரிதாபமாக இறந்தார்.

இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்துரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சப்-இன்ஸ்பெக்டர் பழனி தலைமையிலான போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் தலை துண்டாகி இறந்து கிடந்த வாலிபரின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News