செய்திகள்

கொடைக்கானல் அருகே டாஸ்மாக் கடை முன் பெண்கள் முற்றுகை

Published On 2017-06-22 11:39 GMT   |   Update On 2017-06-22 11:39 GMT
கொடைக்கானல் அருகே டாஸ்மாக் கடை முன் பெண்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கொடைக்கானல்:

கொடைக்கானல் அருகே பூம்பாறையில் குண்டுபட்டி சாலையில் டாஸ்மாக் கடை உள்ளது. இதனை அகற்ற கோரி கிராம மக்கள் போலீசில் புகார் செய்தனர். ஆனால் இதுவரை இந்த கடையை அகற்ற மாவட்ட நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

டாஸ்மாக் கடையினால் தங்களது குடும்பம் சீரழிந்து வருவதாகவும், வீட்டில் உள்ள ஆண்கள் வேலைக்குச் சென்று சம்பாதிக்கும் பணத்தை வீட்டிற்கு கொடுக்காமல் குடித்துவிடுவதாக பெண்கள் குற்றம் சாட்டினர்.

எனவே அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள் ஒன்று திரண்டனர். பின்னர் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு கோ‌ஷம் போட்டனர்.

தகவல் அறிந்த கொடைக்கானல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது 10 நாளில் டாஸ்மாக் கடையை அகற்ற மாவட்ட கலெக்டரிடம் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்தனர். அதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கலைந்து சென்றனர்.
Tags:    

Similar News