செய்திகள்

நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த இந்திய மீனவர்கள் நான்கு பேர் இலங்கை கடற்படையினரால் கைது

Published On 2017-06-21 18:00 GMT   |   Update On 2017-06-21 18:00 GMT
நெடுந்தீவு அருகே இன்று மீன் பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் நான்கு பேரை எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
இராமநாதபுரம்:

நெடுந்தீவு அருகே இன்று மீன் பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் நான்கு பேரை எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

சர்வதேச கடல் எல்லையில் நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் இன்று மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி நான்கு பேரை கைது செய்தனர்.

அவர்களின் படகையும் கைப்பற்றிய இலங்கை கடற்படையினர் காங்கேசன் துறை நீதிமன்றத்தில் அவர்களை ஆஜர் படுத்துவதற்காக கைது செய்து அழைத்துச் சென்றனர்.
Tags:    

Similar News