செய்திகள்

பத்தமடை அருகே கல்லூரி மாணவர் வி‌ஷம் குடித்து தற்கொலை

Published On 2017-06-14 11:36 GMT   |   Update On 2017-06-14 11:36 GMT
கல்லூரி மாணவர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நெல்லை:

பாளை அருகே உள்ள முன்னீர்பள்ளத்தை அடுத்த கோபாலசமுத்திரத்தை சேர்ந்தவர் இசக்கியப்பன். இவரது மகன் சிவரகுநாத் (வயது18). இவர் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தார்.

இரண்டு ஆண்டுகள் தேர்வு எழுதியதில் இவருக்கு 13 பேப்பர் அரியர்ஸ் இருந்ததாம். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த சிவரகுநாத் வி‌ஷம் குடித்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை பாளை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித் தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று இரவு சிவரகுநாத் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News