செய்திகள்
வங்கிக்கு சென்ற பெண் மர்மச்சாவு - தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார்
செவ்வாப்பேட்டையில் வங்கிக்கு சென்ற பெண் ஒருவர் தண்டவாளம் அருகே மர்மமாக உயிரிழந்து கிடந்தார்.
செவ்வாப்பேட்டை:
பட்டாபிராம், செந்தமிழ் நகரை சேர்ந்தவர் சரோஜா (வயது 53). நேற்று மதியம் அருகில் உள்ள வங்கிக்கு சென்றார். பின்னர் அவர் திரும்பி வரவில்லை. அவரை உறவினர்கள் தேடி வந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை வேப்பம்பட்டு- திருநின்றவூர் ரெயில் நிலையம் இடையே உள்ள தண்டவாளம் அருகே சரோஜா பிணமாக கிடந்தார். அருகில் அவர் கொண்டு வந்திருந்த பை மட்டும் கிடந்தது. அவர் ரெயில் மோதி இறந்ததற்கான அடையாளம் இல்லை. வங்கியில் பணம் எடுத்து வந்த அவரை மர்ம நபர்கள் பின்தொடர்ந்து வந்து கொலை செய்து உடலை தண்டவாளம் அருகே வீசி சென்று இருக்கலாம் என்று தெரிகிறது.
இது குறித்து திருவள்ளூர் ரெயில்வே போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஆனந்தன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
பட்டாபிராம், செந்தமிழ் நகரை சேர்ந்தவர் சரோஜா (வயது 53). நேற்று மதியம் அருகில் உள்ள வங்கிக்கு சென்றார். பின்னர் அவர் திரும்பி வரவில்லை. அவரை உறவினர்கள் தேடி வந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை வேப்பம்பட்டு- திருநின்றவூர் ரெயில் நிலையம் இடையே உள்ள தண்டவாளம் அருகே சரோஜா பிணமாக கிடந்தார். அருகில் அவர் கொண்டு வந்திருந்த பை மட்டும் கிடந்தது. அவர் ரெயில் மோதி இறந்ததற்கான அடையாளம் இல்லை. வங்கியில் பணம் எடுத்து வந்த அவரை மர்ம நபர்கள் பின்தொடர்ந்து வந்து கொலை செய்து உடலை தண்டவாளம் அருகே வீசி சென்று இருக்கலாம் என்று தெரிகிறது.
இது குறித்து திருவள்ளூர் ரெயில்வே போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஆனந்தன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.