செய்திகள்

செங்கத்தில் குடிநீர் கேட்டு மறியல்

Published On 2017-04-29 15:09 GMT   |   Update On 2017-04-29 15:09 GMT
செங்கத்தில் குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியல் செய்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

செங்கம்:

செங்கம் கோலாந்தாங்கல் கிராமத்தில் சுமார் 1000-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரி பலமுறை முறையிட்டும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் உள்பட சுமார் 100-க்கும் மேற்பட்டோர், இன்று காலை செங்கம்-போளூர் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதித்தது. தகவலறிந்ததும் விரைந்து வந்த செங்கம் போலீசார், சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதையடுத்து மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News