செய்திகள்

பொன்னேரி அருகே மர்ம காய்ச்சலுக்கு பள்ளி மாணவி பலி

Published On 2017-04-29 09:36 GMT   |   Update On 2017-04-29 09:36 GMT
பொன்னேரி அருகே மர்ம காய்ச்சலுக்கு பள்ளி மாணவி இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பொன்னேரி:

பொன்னேரி அருகே கிருஷ்ணாவரம் மேட்டு சாலையை சேர்ந்தவர் பிரதாப். இவரது மகள் பிரின்சி (வயது 14). பொன்னேரியில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

கடந்த ஒரு வாரமாக பிரின்சி காய்ச்சலால் அவதிப்பட்டார். அவரை தனியார் ஆஸ்பத்திரியிலும், பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியிலும் சேர்த்து சிகிச்சை அளித்தனர். ஆனால் காய்ச்சல் குணமாகவில்லை.

இதனால் பிரின்சியை சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சேர்க்கும்படி டாக்டர்கள் கூறினர். இதையடுத்து அவரை நேற்று மதியம் ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இரவு பிரின்சி இறந்தார்.

மர்ம காய்ச்சலுக்கு பள்ளி மாணவி இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News