செய்திகள்

சசிகலா- தினகரன் பதவி விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு கட்டுப்படுவோம்: அமைச்சர் ஜெயக்குமார்

Published On 2017-04-28 07:33 GMT   |   Update On 2017-04-28 07:33 GMT
சசிகலா, தினகரன், பதவி விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு கட்டுப்படுவோம். இந்த வி‌ஷயத்தில் தேர்தல் ஆணையத்தின் முடிவே இறுதியானது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை:

சென்னையில் அமைச்சர் டி.ஜெயக்குமார் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

சசிகலா, தினகரன், பதவி விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு கட்டுப்படுவோம். இந்த வி‌ஷயத்தில் தேர்தல் ஆணையத்தின் முடிவே இறுதியானது. ஓ.பி.எஸ். அணியுடன் பேச்சு வார்த்தை நடத்த நாங்கள் தயாராகவே இருக்கிறோம். எனக்கு எதிராக பல இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. எனக்கு எதிரான போஸ்டர்களால் எனக்கு விளம்பரம்தான் கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News