செய்திகள்

திருச்சியில் வாலிபர் உள்பட 3 பேர் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2017-04-17 13:07 GMT   |   Update On 2017-04-17 13:07 GMT
திருச்சியில் வாலிபர் உள்பட 3 பேர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இந்த மூன்று தற்கொலை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருச்சி:

திருச்சி, கல்லுக்குழி உலகநாதபுரம் வ.உ.சி நகர் தெருவை சேர்ந்தவர் ராஜகோபால் (வயது43). போட்டோ கிராபர். இவரது மனைவி வாசுகி (30). இருவரும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்தநிலையில் ராஜகோபாலுக்கு குடி பழக்கம் இருந்து வந்தது. இதனால் கணவன் -மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.இதில் மனமுடைந்த ராஜகோபால் இன்று அதிகாலை வீட்டில்யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்து கண்டோன்மென்ட் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி, செல்வாநகர் பாரதியார் நகரை தெருவை சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் விக்னேஷ்வரன் (வயது24). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று இரவு வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு வந்த அவர் திடீரென வீட்டின் அறைக்கு சென்று தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து கோர்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் விவகாரத்தில் தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

திருச்சி, பாலக்கரை இருதயபுரத்தை சேர்ந்தவர் சேவியர் சகாயதாஸ் (வயது48). இவர் கடந்த 12ந்தேதி குடும்ப பிரச்சினை காரணமாக வீட்டில் மின்விசிறியில் தூக்குபோட்டு கொண்டார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருச்சி அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை சேவியர் சகாயதாஸ் பரிதாபமாக இறந்தார். இது குறித்து பாலக்கரை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News