செய்திகள்
குமரி மாவட்டத்தில் 4 வழிச்சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. அறிக்கை
குமரி மாவட்டத்தில் விபத்துக்களை குறைக்க 4 வழிச்சாலை பணிகளை ஒரு வருடத்திற்குள் முடிக்க சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. வேண்டுகோள் விடுத்தார்.
நாகர்கோவில்:
குமரி மாவட்ட தி.மு.க. செயலாளர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
குமரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக விபத்துக்கள் அதிகரித்து வருகிறது. 6 மாதத்தில் மட்டும் 70 பேர் தேசிய நெடுஞ்சாலையில் விபத்தில் பலியாகி உள்ளனர்.
கடந்த 24-ந் தேதி தக்கலை அருகே புலியூர்குறிச்சியில் நடந்த விபத்தில் 4 கல்லூரி மாணவிகள் உயிர் இழந்தனர். திருவனந்தபுரம்-கன்னியாகுமரி 4 வழிச்சாலை திட்டம் 5 ஆண்டுகளுக்கு முன்பு திட்டமிட்டும் அந்த பணிகள் ஆமை வேகத்தில்தான் நடக்கிறது.
எனவே இந்த பணிகளை ஒரு வருடத்திற்குள் முடித்து விபத்துக்களை குறைக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
குமரி மாவட்ட தி.மு.க. செயலாளர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
குமரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக விபத்துக்கள் அதிகரித்து வருகிறது. 6 மாதத்தில் மட்டும் 70 பேர் தேசிய நெடுஞ்சாலையில் விபத்தில் பலியாகி உள்ளனர்.
கடந்த 24-ந் தேதி தக்கலை அருகே புலியூர்குறிச்சியில் நடந்த விபத்தில் 4 கல்லூரி மாணவிகள் உயிர் இழந்தனர். திருவனந்தபுரம்-கன்னியாகுமரி 4 வழிச்சாலை திட்டம் 5 ஆண்டுகளுக்கு முன்பு திட்டமிட்டும் அந்த பணிகள் ஆமை வேகத்தில்தான் நடக்கிறது.
எனவே இந்த பணிகளை ஒரு வருடத்திற்குள் முடித்து விபத்துக்களை குறைக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.