செய்திகள்

நிலக்கோட்டை அருகே குடிபோதையில் குழந்தைகளை வெட்ட முயன்ற தந்தை

Published On 2016-10-24 16:25 GMT   |   Update On 2016-10-24 16:25 GMT
நிலக்கோட்டை அருகே குடி போதையில் குழந்தைகளை வெட்ட முயன்ற கணவர் குறித்து மனைவி கோர்ட்டில் புகார் அளித்தார்.

நிலக்கோட்டை:

வத்தலக்குண்டு முத்து ராலிங்கத் தேவர் தெருவை சேர்ந்த தவமணி மகள் சுதா (வயது35). இவருக்கும் நிலக்கோட்டை அருகில் உள்ள தர்மத்து பட்டியை சேர்ந்த சிவமாயன் மகன் பேயத்தேவர் என்பவருக்கும் கடந்த 2001-ம் ஆண்டு திருமணம் நடந்தது.

திருமணத்தின்போது 11 பவுன் நகை, ரொக்கம் பணம் மற்றும் சீர்வரிசைகள் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது.

இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். பேயத்தேவர் தினமும் குடித்து விட்டு தனது மனைவியை அடித்து சித்ரவதை செய்துள்ளார். மேலும் கூடுதல் வரதட்சணை வாங்கி வரச் சொல்லியும் மிரட்டினார்.

சம்பவத்தன்று வரதட்சணை வாங்கி வராத ஆத்திரத்தில் குடிபோதையில் வந்த பேயத்தேவர் தனது 2 குழந்தைகளையும் அரிவாளால் வெட்ட முயன்றார். அதன் பிறகு குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேறிய சுதா இது குறித்து நிலக்கோட்டை மாஜிஸ்திரேட் ரிஜோனாபர்வீனிடம் புகார் அளித்தார்.

இது குறித்து உரிய விசாரணை நடத்த நிலக்கோட்டை அனைத்து மகளிர் போலீசாருக்கு மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். அவரது உத்தரவின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் முருகேஸ்வரி குடிபோதையில் குழந்தைகளை வெட்ட முயன்ற கணவர் பேயத்தேவர், மாமியார் அங்கம்மாள், உறவினர்கள் பேச்சியம்மாள், மொக்கமாயன், விராலி, பஞ்சவர்ணம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News