உள்ளூர் செய்திகள்

கோவையில் விபத்தில் பெண் உள்பட 2 பேர் பலி

Published On 2022-08-05 09:53 GMT   |   Update On 2022-08-05 09:53 GMT
  • 2 பேரும் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தனர்.
  • சிகிச்சை பலனளிக்காமல் சரோஜா பரிதாபமாக இறந்தார்.

கோவை:

கோவை அருகே உள்ள நரசிம்ம நாயக்கன் பாளையம் அங்கண்ணன் நகரை சேர்ந்தவர் லோக சண்முகம். இவரது மனைவி சரோஜா தேவி (வயது 53).

சம்பவத்தன்று இவர் தனது மகன் வெங்கட் பிரவு என்பவரது மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து சென்றார். மோட்டார் சைக்கிள் கோவை- சிறுவாணி மெயின் ரோட்டில் ஆண்டிப்பாயைம் சந்திப்பில் சென்ற போது ரோட்டின் நடுவே இருந்த வேகதடையை வெங்கட் பிரவு கவனிக்காமல் சென்றார். அப்போது 2 பேரும் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தனர்.

இதில் சரோஜா தேவி தலை மற்றும் உடலில் பலத்த காயம்அடைந்து உயிருக்கு போராடினார். அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சரோஜா தேவியை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர்.

ஆனால் சிகிச்சை பலனளிக ்காமல் அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து பேரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பொள் ளாச்சி ராமு அவென் யூவை சேர்ந்த வர் சதீஷ் (32). சமையல் தொழி லாளி. சம்பவத ்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் உடுமலை - பொள்ளாச்சி ரோட்டில் சென்றார். அப்போது திடீரென மோட்டார் சைக்கிள் கட்டு ப்பாட்டை இழந்து கீழே விழுந்தார்.

இதில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் சதீஷ் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து பொள்ளாச்சி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்த விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

Similar News