உள்ளூர் செய்திகள்

தொழிலாளி உள்பட 2 பேர் பலி

Published On 2022-10-22 09:10 GMT   |   Update On 2022-10-22 09:10 GMT
  • ரோட்டை வாலிபர் ஒருவர் கடக்க முயன்றார்.
  • எந்த ஊரை சேர்ந்தவர்?

கோவை,

கோவை சுந்தராபுரம் அருகே உள்ள கல்லுகுழி ரோட்டை சேர்ந்தவர் சிவசாமி (வயது 36).

கூலித் தொழிலாளி. சம்பவத்தன்று இவர் தனது மொபட்டில் சம்பவத்தன்று சிவசாமி மது போதையில் தனது மொபட்டில் வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார். மொபட் மாரியம்மன் கோவில் வீதி அருகே சென்ற போது நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

இதில் தலையில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிய அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் சிவசாமி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து மேற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோவை-அவினாசி ரோட்டை 25 வயது மதிக்க தக்க வாலிபர் ஒருவர் கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக சென்ற கார் வாலிபர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் மோதி இறந்த வாலிபர் யார் ?எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.  

Tags:    

Similar News