உள்ளூர் செய்திகள்

பாவூர்சத்திரம் அருகே ரூ.2 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் -2 பேர் கைது

Published On 2022-06-23 09:00 GMT   |   Update On 2022-06-23 09:00 GMT
  • புகையிலை பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
  • ஆனந்த செல்வன்மற்றும் தேவராஜ் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

தென்காசி:

தென்காசி மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா மற்றும் புகையிலை பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது காவல்துறை மற்றும் உணவு பாதுகாப்புத் துறையினர் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதன்படி பாவூர்சத்திரம் அருகே சின்ன குமார்பட்டியை சேர்ந்த ஆனந்த செல்வன் (வயது 25) மற்றும் செட்டியூர் அருகே பஞ்சபாண்டியூரை சேர்ந்த தேவராஜ் (40) ஆகிய இருவரும் பாவூர்சத்திரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா மற்றும் குட்கா பொருட்களை விற்பனை செய்து வந்துள்ளனர்.

தகவலின்பேரில் தனிப்படை போலீசார் சோதனை நடத்தி விற்பனைக்காக வைத்திருந்த ரூ. 2 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர்.

Tags:    

Similar News