உள்ளூர் செய்திகள்
கடையநல்லூர் பள்ளியில் 118 தனிமங்களின் பெயரை வேகமாக கூறும் பிளஸ்-2 மாணவி
- மசூது தைக்கா மேல்நிலைப்பள்ளி 12- ம் வகுப்பு படிக்கும் மாணவி சப்ரீன் வேதியியலில் உள்ள 118 தனிமங்களின் பெயரை சில விநாடிகளில் கூறினார்.
- கின்னஸ் உள்ளிட்ட உலக சாதனைக்காக முயற்சி செய்து வருவதாகவும் மாணவி சப்ரீன் தெரிவித்தார்.
கடையநல்லூர்:
கடையநல்லூர் மசூது தைக்கா மேல்நிலைப் பள்ளி 12- ம் வகுப்பு படிக்கும் மாணவி சப்ரீன், பள்ளி தாளாளர் ஹஸன் மக்தூம், தலைமை ஆசிரியர் சிக்கந்தர் ரஹ்மான் ஆகியோர் முன்னிலையில் வேதியியலில் உள்ள 118 தனிமங்களின் பெயரை சில விநாடிகளில் கூறினார்.
இதற்கான ஏற்பாடுகளை வேதியியல் ஆசிரியர் முகமது இர்சாத், உதவி தலைமை ஆசிரியர்கள் முகம்மது மசூது, ஹபிபுல்லா, ஆசிரியர்கள் முகம்மது தஸ்லீம், செய்யது மசூது உள்ளிட்டோர் செய்திருந்தனர். வேதியியல் தனிம அட்டவணையில் உள்ள 118 தனிமங்களின் பெயரை 11 நொடி முதல் 12 நொடிக்குள் சொல்லி முடிப்பதாகவும், இதில் கின்னஸ் உள்ளிட்ட உலக சாதனைக்காக முயற்சி செய்து வருவதாகவும் மாணவி சப்ரீன் தெரிவித்தார்.