செய்திகள்

ஆடி நிறுவனத்திற்கு ரூ.6,822 கோடி அபராதம்

Published On 2018-10-16 11:36 GMT   |   Update On 2018-10-16 11:36 GMT
உலகின் பிரபல ஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனமான ஆடி ரூ.6,822 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. #Audi



ஜெர்மன் நாட்டு ஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனமான ஆடி மீது ரூ.6,822 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

ஆடி நிறுவன கார்களில் 6 மற்றும் 8-சிலின்டர் டீசல் இன்ஜின்களில் அதிக மாசு ஏற்படுத்தியதால் ஆடி நிறுவனம் மீது அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அபராத தொகையை எதிர்க்கும் திட்டமில்லை என்றும் அபராதத்தை ஏற்றுக் கொள்வதாக ஆடி அறிவித்துள்ளது.

கார் எமிஷன் முறைகேடு செய்ததில் உடந்தையாக இருந்ததாக ஆடி தலைமை அதிகாரிகளில் ஒருவரான ரூப்பெர்ட் ஸ்டேட்லர் மீது ஃபோக்ஸ்வேகன் நடவடிக்கை எடுத்தது. விற்பனை பிரிவு அதிகாரியான பிராம் ஸ்காட் இடைக்கால தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றுகிறார்.



முன்னதாக ஜூன் மாதத்தில் ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் மீது ரூ.85,10,99,78,047 அபராதம் விதிக்கப்பட்டது. இந்த விவகாரத்திலும் ஃபோக்ஸ்வேகன் தனது கார்களில் முறைகேடு செய்து சாலைகளில் மாசு அதிகரிக்க காரணமாக இருந்தது கண்டறியப்பட்டது. 

அதிக மாசு ஏற்படுத்தும் நான்கு சிலின்டர் இன்ஜின்களை உற்பத்தி செய்து அவற்றை விற்றதற்காக ஃபோக்ஸ்வேகன் மீது அபராதம் விதிக்கப்பட்டது. 
Tags:    

Similar News