செய்திகள்

ரூ.1.5 லட்சம் வரை தள்ளுபடி வழங்கும் ஹூன்டாய்

Published On 2018-10-06 12:58 GMT   |   Update On 2018-10-06 12:58 GMT
இந்தியாவில் பண்டிகை காலத்தை முன்னிட்டு ஹூன்டாய் நிறுவன வாகனங்களுக்கு அந்நிறுவனம் சிறப்பு தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. #Hyundai #offer



புதிய பொருள் வாங்கும் பலரும் பண்டிகை காலத்தில் தான் அவற்றை நிறைவேற்றிக் கொள்வர். பொதுவாக பண்டிகை காலங்களில் பொருட்களுக்கு அதிகப்படியான தள்ளுபடி மற்றும் சலுகைகள் வழங்கப்படும். 

இந்தியாவில் பண்டிகை காலங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதால், பலர் இந்த காலக்கட்டத்தில் வாகனங்களை வாங்க ஆர்வம் காட்டுவர். இந்த பண்டிகை காலத்தில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது வாகனங்களுக்கு அதிகளவு சலுகைகளை வழங்குகின்றன.

அந்த வகையில் ஹூன்டாய் தனது கார்களுக்கு அதிகபட்சம் ரூ.1.5 லட்சம் வரை தள்ளுபடி வழங்குகிறது. பண்டிகை கால சலுகைகள் அக்டோபர் 31, 2018 வரை வழங்கப்படுகிறது.



ஹூன்டாய் இயான் மாடலுக்கு ரூ.60,000 வரை சலுகைகள் வழங்கப்படுகின்றன. இதில் ரூ.45,000 தள்ளுபடி, ரூ.10,000 எக்சேன்ஜ் சலுகை மற்றும் ரூ.5,000 வரை கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஹூன்டாய் இயான் போன்று ஐ20, ஐ20 ஆக்டிவ், வெர்னா, , கிரான்ட் i10, எக்ஸ்-சென்ட், எலான்ட்ரா மற்றும் டக்சன் உள்ளிட்ட வாகனங்களுக்கும் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகின்றன.

இவற்றில் ஹூன்டாய் எலான்ட்ரா மற்றும் டக்சன் வாகனங்களுக்கு அதிகபட்சம் ரூ.1.5 லட்சம் வரையிலான சலுகைகள் வழங்கப்படுகின்றன. இந்த மாடல்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு வருடத்திற்கான இன்சூரன்ஸ் இலவசமாக வழங்கப்படுகிறது.

சிறப்பு தள்ளுபடி மட்டுமின்றி வாடிக்கையாளர்களுக்கு இலவச இன்சூரன்ஸ் மற்றும் எக்சேன்ஜ் சலுகை உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.
Tags:    

Similar News