செய்திகள்
வெற்றி வாகை சூடிய எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி தொகுதியில் வெற்றி வாகை சூடிய எடப்பாடி பழனிசாமி

Published On 2021-05-02 15:02 GMT   |   Update On 2021-05-02 15:02 GMT
எடப்பாடி தொகுதியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக வேட்பாளர் சம்பத்குமாரை விட 93,802 வாக்குகள் அதிகமாக பெற்று வெற்றி பெற்றார்.
எடப்பாடி

தமிழக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. எடப்பாடி தொகுதியில் அதிமுக சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் போட்டியிட்டார். திமுக சார்பில் சம்பத்குமார்,  அமமுக சார்பில் பூக்கடை சேகர், மக்கள் நீதி மய்யம் சார்பில் தாசப்பராஜ், நாம் தமிழர் கட்சி சார்பில் ஸ்ரீரத்னா ஆகியோர் போட்டியிட்டனர்.

வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே எடப்பாடி பழனிசாமி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தார். கடைசி சுற்று நிலவரப்படி 93,802 வாக்குகள் வித்தியாசத்தில் எடப்பாடி பழனிசாமி  வெற்றி பெற்றார். எடப்பாடி பழனிசாமி 1,63,154 வாக்குகளும், சம்பத்குமார் 69,352 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
Tags:    

Similar News