செய்திகள்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 74.36 சதவீத வாக்குப்பதிவு: தொகுதிகள் வாரியாக உள்ளே...
தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் 74.36 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.
ராணிப்பேட்டை:
தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற்ற தேர்தலில் 71.79 சதவீத வாக்குகள் பதிவாகின.
அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 78 சதவீதம் வாக்குகளும், குறைந்த பட்சமாக சென்னை மாவட்டத்தில் 59.40 சதவீதம் வாக்குகள் பதிவாகின.
ராணிப்பேட்டை 74.36 சதவீதம் வாக்குகளும் பதிவாகின. தேர்தல் ஆணைய செயலியில் உள்ள தகவலின் அடிப்படையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தொகுதிகள் வாரியாக பதிவான வாக்குகள் விவரம்:-
அரக்கோணம்- 74.74%
ஆற்காடு- 70.73%
ராணிப்பேட்டை - 77.25%
சோழிங்கநல்லூர்- 80.01%