செய்திகள்
தினகரன்

திமுக ஆட்சிக்கு வந்தால் ஒரு ஆற்றில் கூட மண் இருக்காது- டிடிவி தினகரன் பேச்சு

Published On 2021-03-20 11:56 GMT   |   Update On 2021-03-20 11:56 GMT
சட்டசபை தேர்தலில் அதிமுக , திமுகவுக்கு மாற்று கட்சியாக அமமுக வரும் என்று திருவிடைமருதூரில் டிடிவி தினகரன் பேசியுள்ளார்.
திருவிடைமருதூர்:

தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 6-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி திருவிடைமருதூரில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பரப்புரை மேற்கொண்டார்.   அப்போது அவர் பேசியதாவது,

அதிமுக , திமுகவுக்கு மாற்று கட்சியாக அமமுக வரும். ரூ.1000, ரூ. 1500 தருவோம் என ஏலம் போடுகிறார்கள் ஆனால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை. 

திமுக ஆட்சிக்கு வந்தால் ஒரு ஆற்றில் கூட மண் இருக்காது. எங்களால் செய்ய முடிந்தவற்றை சொல்கிறோம். மற்றவர்களைப் போல பொய் சொல்லவில்லை என்றார்.
Tags:    

Similar News