செய்திகள்
ஓ.பன்னீர்செல்வம்

ஓ.பன்னீர்செல்வம் வேட்புமனு ஏற்பு

Published On 2021-03-20 08:04 GMT   |   Update On 2021-03-20 08:04 GMT
தேனி மாவட்டம் போடி சட்டமன்ற தொகுதியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் 3-வது முறையாக அ.தி.மு.க சார்பில் போட்டியிடுகிறார்.
போடி:

தேனி மாவட்டம் போடி சட்டமன்ற தொகுதியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் 3-வது முறையாக அ.தி.மு.க சார்பில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து தி.மு.க சார்பில் தங்க தமிழ்ச்செல்வன், அ.ம.மு.க சார்பில் முத்துச்சாமி உள்பட மொத்தம் 51 பேர் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

மனுக்கள் பரிசீலனையின்போது இன்று ஓ.பி.எஸ், தங்கதமிழ்ச்செல்வன் உள்பட 44 பேர் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. மற்ற அனைவரது மனுக்களும் நிராகரிக்கப்பட்டன. இதேபோல ஆண்டிபட்டி, கம்பம், பெரியகுளம் ஆகிய தொகுதிகளிலும் அ.தி.மு.க, தி.மு.க உள்பட அரசியல் கட்சிகளின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
Tags:    

Similar News