செய்திகள்
வேட்புமனுவை தாக்கல் செய்தார் ஓபிஎஸ்

போடி தொகுதியில் வேட்புமனுவை தாக்கல் செய்தார் ஓபிஎஸ்

Published On 2021-03-12 08:45 GMT   |   Update On 2021-03-12 08:45 GMT
போடி தொகுதியில் 3-வது முறையாக போட்டியிடும் ஓ.பன்னீர்செல்வத்தை எதிர்த்து திமுக சார்பில் தங்க தமிழ்ச்செல்வன் போட்டியிடுகிறார்.
போடி:

தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள 30 சட்டமன்ற தொகுதிகளுக்கும் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. அத்துடன், காலியாக உள்ள கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.

இதையடுத்து, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வேட்பு மனுத்தாக்கல் இன்று தொடங்கியது. காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம்.

நாளை மற்றும் நாளை மறுநாள் விடுமுறை நாட்கள் ஆகும். எனவே, 2 நாட்கள் வேட்புமனுத்தாக்கல் செய்ய முடியாது. தொடர்ந்து, 15-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை வேட்புமனுத்தாக்கல் செய்யலாம்.

இந்நிலையில், தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

போடி தொகுதியில் 3-வது முறையாக போட்டியிடும் ஓ.பன்னீர்செல்வத்தை எதிர்த்து திமுக சார்பில் தங்க தமிழ்ச்செல்வன் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News