செய்திகள்
காங்கிரஸ்

234 தொகுதிகளுக்கும் காங்கிரஸ் நேர்காணல் தொடங்கியது

Published On 2021-03-06 07:04 GMT   |   Update On 2021-03-06 07:04 GMT
கூட்டணி, தொகுதிகள் எதுவும் உறுதியாகாமல் இருப்பதால் அனைத்து தொகுதிகளுக்கும் நேர்காணல் நடத்தி பட்டியல் தயாரித்து தயார் நிலையில் வைக்க திட்டமிட்டு இருப்பதாக காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்தனர்.
சென்னை:

தி.மு.க.-காங்கிரஸ் இடையேயான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் இதுவரை எந்த முடிவும் ஏற்படவில்லை.

இந்த நிலையில் 234 தொகுதிகளுக்கும் காங்கிரசில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. மனு கொடுத்தவர்களிடம் சத்தியமூர்த்தி பவனில் இன்று நேர்காணல் நடந்தது.

திருநாவுக்கரசர், இளங்கோவன், தங்கபாலு, ஜெயக்குமார், செல்லக்குமார் ஆகியோர் தலைமையில் 5 குழுக்கள் நேர்காணலை நடத்தியது. நாளை பிற்பகல் வரை நேர்காணல் நடக்கிறது.

கூட்டணி, தொகுதிகள் எதுவும் உறுதியாகாமல் இருப்பதால் அனைத்து தொகுதிகளுக்கும் நேர்காணல் நடத்தி பட்டியல் தயாரித்து தயார் நிலையில் வைக்க திட்டமிட்டு இருப்பதாக காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்தனர்.
Tags:    

Similar News