லைஃப்ஸ்டைல்

சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த பனி வரகு கஞ்சி

Published On 2018-03-27 05:06 GMT   |   Update On 2018-03-27 05:06 GMT
சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி உணவில் சிறுதானியங்களை சேர்த்து கொள்வது நல்லது. இன்று பனிவரகில் கஞ்சி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் 

 பனி வரகு - ¼ கப்
 பால் - 1 கப்
சுக்கு சீரகம் - கால் தேக்கரண்டி
 பூண்டு - 10 பல்
 உப்பு- தேவையான அளவு
 வெந்தயம்- தேவையான அளவு



செய்முறை : 

முதலில் சுத்தம் செய்த கால் கிண்ணம் பனி வரகு அரிசியை ஒரு குவளை தண்ணீரில் வேக வைக்கவும். 

பனி வரகு பாதி அளவு வெந்ததும், உரித்த பூண்டு, சுக்கு, சீரகம், வெந்தயம், பால் சேர்த்து வேகவிடவும்.

நன்றாக வெந்ததும் தேவையான உப்பு சேர்த்துக் கலக்கி இறக்கவும். 

சூடான பனி வரகு கஞ்சி தயார்.

இதனுடன் மோர்  சேர்த்து அருந்தலாம். அருமையாக இருக்கும்.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News