லைஃப்ஸ்டைல்

சத்தான டிபன் கேழ்வரகு ஊத்தாப்பம்

Published On 2017-08-18 03:31 GMT   |   Update On 2017-08-18 03:31 GMT
கேழ்வரகு மாவில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன. காலை அல்லது மாலை நேரத்தில் ராகி ஊத்தாப்பம் செய்து சாப்பிட்டால் உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது.
தேவையான பொருட்கள் :

கேழ்வரகு மாவு - 2 கப்
பச்சை மிளகாய் -  3
சீரகம் - 1 டீஸ்பூன்
துருவிய இஞ்சி - 1 டீஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப
தண்ணீர் - தேவையான அளவு
தயிர் - 1/2 கப்
எண்ணெய் - தேவையான அளவு
தக்காளி - 1
வெங்காயம் - 1
கொத்தமல்லி தழை - சிறிதளவு.

செய்முறை :

வெங்காயம், தக்காளி, ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவு, பச்சை மிளகாய், சீரகம், துருவிய இஞ்சி, உப்பு, சிறிதளவு தண்ணீர், தயிர் சேர்த்து நன்றாக தோசை மாவு பதத்துக்கு கரைத்து கொள்ளவும்.

அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சிறிதளவு எண்ணெய் தடவி அதன் மேலாக கரைத்து வைத்துள்ள ராகி மாவை கெட்டியாக ஊத்தாப்பம் போல் ஊற்றி அதன் மேலாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, மிளகாய், கொத்தமல்லி தழை தூவி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு இருபுறமும் வேக வைத்து எடுக்கவும்.

சத்தான கேழ்வரகு ஊத்தாப்பம் ரெடி!

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News