அழகுக் குறிப்புகள்

கோடை வெயில் இருந்து கூந்தல் பாதுகாக்கணுமா? இதை ஃபாலோ பண்ணுங்க...

Published On 2024-05-05 12:06 GMT   |   Update On 2024-05-05 12:06 GMT
  • இரவில் தலைகுளியல் மேற்கொண்டால் படுக்கை செல்லுவதற்கு மூன்று மணி நேரம் முன்பே தலைக்குளியல் செய்துவிடுங்கள்.
  • சூரியனின் புற ஊதாக்கதிர்களில் இருந்து இழைகளை பாதுகாத்து கொள்வது அவசியம்.

சூரியனிலிருந்து வரும் வெப்பம் கூந்தலுக்கு அதிக ஆக்ஸிஜனேற்ற சேதத்தை உண்டாக்குகிறது. இது உலர்ந்த உடையக்கூடிய மற்றும் கடினமான கூந்தலை உண்டாக்குகிறது. ஏற்கனவே பளபளப்பாக இருக்கும் கூந்தலே சூரியனின் வெப்பத்தால் பல விளைவுகளை சந்திக்கும் போது வறட்சியான கடினமான கூந்தலின் நிலை இன்னும் மோசமானதாக ஆகிவிடுகிறது. ஹேர் கலர் செய்த கூந்தல் மங்கலான தோற்றத்தில் மாறிவிடுகிறது. வெளுத்து வெண்மையாகிவிடுகிறது. இந்த காலத்தில் முடியை பாதுகாக்கும் முறைகள் குறித்து பார்க்கலாம்.

சூரியனின் புற ஊதாக்கதிர்கள் முடியை உலர்த்தி விட செய்யும். இது கூந்தல் இழையின் மென்மையான அல்லது வெளிப்புற அடுக்கை கடினமாக்குகிறது. இது ஃப்ரீஸ் முடியை கொண்டிருப்பவர்களுக்கு இன்னும் சிக்கலான பிரச்சனை வர செய்கிறது. இது முடி உதிர்தலை அதிகமாக்குகிறது.

கோடையின் வெப்பத்தை தணிக்க நீச்சலில் ஈடுபடும் போது அது மேலும் கூந்தலின் எண்ணெய்ப்பசையை நீக்க செய்கிறது. மேலும் இதில் உள்ள குளோரின் கூந்தலில் இருக்கும் ஈரப்பசையை வெளியேற்ற செய்கிறது. அதிகமான வெப்பத்தால் பாதிக்கப்படும் முடியை எப்படி பராமரிப்பது என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.


கோடைக்காலத்தில் முதலில் முடி பிளவை கட்டுப்படுத்துங்கள். அவை வராமல் தடுக்க முன்கூட்டியே கூந்தலை வெட்டி விடுவது பாதுகாப்பானது. அதே நேரம் குளிர்காலத்தை காட்டிலும் கோடைக்காலத்தில் முடியின் வளர்ச்சி வேகமாக இருக்கும்.

அதனால் பெண்கள் தங்கள் கூந்தலின் நுனியில் சிறிதளவு வெட்டி விடுவது நல்லது. ஆண்களும் கழுத்துவரையிலும் காது வரையிலும் ஒட்டியிருக்கும் முடியை மேலும் வளரவிடாமல் வெட்டிவிடுவது நல்லது.

சூரியனின் புற ஊதாக்கதிர்களில் இருந்து இழைகளை பாதுகாத்து கொள்வது அவசியம். அதனால் கூந்தலுக்கு முடி பராமரிப்பு பொருளை பயன்படுத்துவதை தினசரி வழக்கமாக்கி கொள்ளுங்கள். இது உங்களின் தன்மைக்கேற்ப ஜெல் அல்லது க்ரீம் வகைகளாக இருக்கலாம்.

இது சூரியனின் புற ஊதாக்கதிர்களிலிருந்து சேதத்தை தவிர்க்கலாம். இது கலரிங் செய்த முடிக்கும் பாதுகாப்பு அளிக்கிறது. உங்கள் பணி அதிகம் வெயில் என்றால் நீங்கள் கூந்தலின் உச்சந்தலையை முழுமையாக மறைக்கும் தொப்பியை அணிவது அவசியம். இது உச்சந்தலையை பாதுகாப்பதோடு சரும புற்றுநோயையும் தடுக்க செய்யும்.

தலை குளியலுக்கு முன்பு கூந்தலை ஈரப்பதமாக வைத்திருக்க செய்யுங்கள். குறிப்பாக கண்டிஷனர் பயன்படுத்திய பிறகு என்றால் அது நீங்கள் உப்புநீரில் குளித்தாலும் ரசாயனங்களை உறிஞ்சாது. குறிப்பாக நீங்கள் நீச்சல் குளங்களில் குளிப்பதாக இருந்தால் இது பாதுகாப்பானது. இயற்கை பொருள்களையும் பயன்படுத்தலாம்.

உங்கள் கூந்தலின் தன்மைக்கேற்ப நீங்கள் ஷாம்பு மற்றும் கண்டிஷனரை பயன்படுத்தி இருக்கலாம். ஆனால் கோடையில் வெளியேறும் வியர்வை பிரச்சனைக்கு நீங்கள் கண்டிப்பாக ஈரப்பதம் அளிக்கும் ஷாம்பு மற்றும் கண்டிஷரை பயன்படுத்த வேண்டும். வியர்வை பிரச்சனையில் கோடையில் வாரம் இரண்டு நாள் வரை நீங்கள் தலைகுளியலை மேற்கொள்வீர்கள்.

அதனால் இரசாயனம் இல்லாத ஷாம்பு மற்றும் கண்டிஷனரை பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் கூந்தலின் அடி அடுக்குவரை கண்டிஷனிங் செய்வதை உறுதி செய்யலாம்.


சூடான கருவிகள் பொறுத்தவரை வாரம் ஒருமுறை அல்லது இரண்டு முறை தலைமுடிக்கு சூடான கருவிகள் பயன்படுத்துவதன் மூலம் முடியின் ஈரப்பதம் மேலும் குறைகிறது.

இரவில் தலைகுளியல் மேற்கொண்டால் படுக்கை செல்லுவதற்கு மூன்று மணி நேரம் முன்பே தலைக்குளியல் செய்துவிடுங்கள். பிறகு தூங்குவதற்கு முன்பு தலையை பின்னலிட்டு தூங்குங்கள். இது கூந்தல் இழைகள் ஒன்றோடொன்று உரசி பாதிப்பில்லாமல் செய்வதை தடுக்கும்.

அழகான கூந்தல் அலங்காரத்தின் மீது உங்களுக்கு ஆர்வம் இருக்கலாம். ஆனால் கோடைக்காலத்தில் இதை அதிகமாக செய்ய வேண்டாம். கூந்தலை சிக்கில்லாமல் வைக்க போனிடெயில் அல்லது எளிதான பின்னல் மூலம் அலங்காரத்தை முடிவு செய்யுங்கள்.

முடி ஃப்ரீஸ் ஆவதற்கு எதிரான பாதுகாப்பை நீங்கள் செய்து கொள்வதன் மூலம் கூந்தலின் ஈரப்பதத்தை காக்கலாம். இந்த காலத்தில் கூந்தல் நிபுணரின் ஆலோசனையின் பெயரில் கூந்தலை மென்மையாக்கும் எண்ணெய், சீரம் போன்றவற்றை பயன்படுத்தலாம். ஆனால் எதுவாக இருந்தாலும் கூந்தல் பராமரிப்புக்கு பயன்படுத்தும் பொருள்கள் கண்டிப்பாக தரமானதாக பயன்படுத்துங்கள்.

Tags:    

Similar News