காபித்தூள் தரும் 'கலக்கல்' அழகு
- ஒரு கிண்ணத்தில் 3 டேபிள் ஸ்பூன் காபித் தூள், 1 டேபிள் ஸ்பூன் கடலை மாவை எடுத்துக்கொள்ள வேண்டும்.
- இந்த பேஸ்பேக்குகளை தொடர்ந்து போட்டு வர, முகத்தில் பொலிவும் பிரகாசமும் கூடும்.
வீட்டில் உள்ள ஒரு பொருளைப் பயன்படுத்தியே முகச் சரும பராமரிப்பை மேற்கொள்ள முடியும், பொலிவைக் காக்க இயலும்.
அதற்கு காபித் தூள் போதும். சருமப் பொலிவைக் காக்க உதவும் சில 'காபி பேஸ்பேக்'குகள் இங்கே...
காபித்தூள்-தேன்
இந்த பேஸ் பேக்குக்கு ஒரு கிண்ணத்தில் 1 டேபிள் ஸ்பூன் காபித்தூளை எடுத்து, அத்துடன் தேன் சேர்த்து விழுதாக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் அதை முகத்தில் தடவி, 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்பு, குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி வாரத்துக்கு ஒன்றிரண்டு முறை பயன்படுத்தி வந்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்குவதோடு, சருமச் சுருக்கங்களும், கரும்புள்ளிகளும் குறையும்.
காபித்தூள்-மஞ்சள்
ஒரு கிண்ணத்தில் 1 டேபிள் ஸ்பூன் காபித் தூளை எடுத்து, அத்துடன் ½ டேபிள் ஸ்பூன் பால் மற்றும் 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து விழுதாக தயாரித்துக் கொள்ள வேண்டும். பின்பு அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி, 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பிறகு, குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
காபித்தூள்-கடலை மாவு
ஒரு கிண்ணத்தில் 3 டேபிள் ஸ்பூன் காபித் தூள், 1 டேபிள் ஸ்பூன் கடலை மாவை எடுத்துக்கொள்ள வேண்டும். பின்பு அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல், 2 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பிறகு அதை முகத்தில் தடவி, 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும். அதன் பின், குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
காபித்தூள் -தயிர்
ஒரு கிண்ணத்தில் 1 டேபிள் ஸ்பூன் காபித் தூள் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின்பு அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி, 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
காபித்தூள்-தேங்காய் எண்ணெய்
இந்த பேஸ் பேக்குக்கு ஒரு கிண்ணத்தில் 1 டேபிள் ஸ்பூன் காபித் தூள் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து விழுதாக தயாரித்துக்கொள்ள வேண்டும். பின்னர் அதை முகத்தில் தடவி, சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். பின்பு 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும். அடுத்து குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
இந்த பேஸ்பேக்குகளை தொடர்ந்து போட்டு வர, முகத்தில் பொலிவும் பிரகாசமும் கூடும்.