வழிபாடு

தோப்புத்துறை அபிஷ்ட வரதராஜ பெருமாள் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

Published On 2022-09-02 05:50 GMT   |   Update On 2022-09-02 05:50 GMT
  • வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன.
  • தினமும் சாமி வீதி உலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே தோப்புத்துறையில் உள்ள பழமை வாய்ந்த அபிஷ்ட வரதராஜபெருமாள் கோவிலில் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

முன்னதாக வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. பின்னர் கோவிலில் உள்ள கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வரதராஜ பெருமாளை வழிபட்டனர்.

விழாவையொட்டி தினமும் சாமி வீதி உலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

Tags:    

Similar News