வழிபாடு

புனித அந்தோணியார் ஆலய பெரிய தேர்பவனி

Published On 2022-06-20 03:44 GMT   |   Update On 2022-06-20 03:44 GMT
  • தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது.
  • இதில் திரளானோர் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.

கீழ்வேளூர் அருகே கோகூரில் புனித அந்தோணியார் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலய ஆண்டு பெருவிழா கடந்த 7-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழா நாட்களில் தினமும் ஜெபம், வழிபாடு, திருப்பலி, மரையுறை ஆகியவை நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மின் அலங்கார பெரிய தேர்பவனி நேற்று முன்தினம் இரவு நடந்தது. முன்னதாக மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் சம்மனசு, மாதா, அந்தோணியார் ஆகியோர் எழுந்தருளினர்.

இதை தொடர்ந்து தமிழக ஆயர் பேரவை துணை செயலர் சகாயராஜ், ஆலய பங்குதந்தை ஜான்பீட்டர் ஆகியோர் தலைமையில் நவநாள், ஜெபம், சிறப்பு திருப்பலி ஆகியவை நடந்தது.

பின்னர் ஆலய வளாகத்தில் இருந்து பெரிய தேர்பவனி தொடங்கியது. தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. இதில் நாகை, திருவாரூர், காரைக்கால், மயிலாடுதுறை மாவட்டங்களைச் சேர்ந்த திரளானோர் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.

Tags:    

Similar News