வழிபாடு

ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் ஜூலை 16-ந்தேதி திறப்பு

Published On 2023-06-22 04:52 GMT   |   Update On 2023-06-22 04:52 GMT
  • 17-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை பூஜைகள், வழிபாடுகள் நடைபெறும்.
  • பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் அனுமதிக்கப்படுவார்கள்.

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை ஆனி மாத பூஜைக்காக கடந்த 15-ந் மாலை 5.30 மணிக்கு திறக்கப்பட்டது. ஆனி மாத பூஜையை முடிந்து 20-ம் தேதி சகஸ்ரகலச பூஜையும், அதைத்தொடர்ந்து நடைபெற்ற வழக்கமான பூஜைகளுக்கு பின் அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு, கோவில் நடை அடைக்கப்பட்டது.

ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை அடுத்த மாதம் (ஜூலை) 16-ந் தேதி மாலை 5.30 மணிக்கு திறக்கப்படும். 17-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை 5 நாட்கள் பூஜைகள், வழிபாடுகள் நடைபெறும். வழக்கம் போல் பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக, நிலக்கல்லிலும் உடனடி தரிசனத்திற்கான முன்பதிவு நடைபெறும் என்று திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்து உள்ளது.

Tags:    

Similar News