search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sabarimalai"

    • தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்து அய்யப்பன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் தேனி மாவட்டம் வழியாக செல்கின்றனர்.
    • நாளை (20ந் தேதி) முதல் சபரிமலையில் மகரஜோதி தரிசன தினம் வரை தேனி மாவட்டம் வழியாக செல்லும் வாகனங்களுக்கு ஒருவழிப்பாதை அமல்படுத்தப்படுகிறது.

    தேனி:

    சபரிமலை அய்யப்பன் கோவிலில் மகரஜோதி, மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்து அய்யப்பன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் தேனி மாவட்டம் வழியாக செல்கின்றனர்.

    இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே இதனை தவிர்க்கும் விதமாக நாளை முதல் ஒருவழிப்பாதை அமல்படுத்த தேனி மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    சபரிமலை அய்யப்பன் ேகாவிலில் நடைபெறும் மண்டல பூஜையையொட்டி தேனி மாவட்டம் வழியாக சபரிமலைக்கு செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    எனவே போக்குவரத்து இடையூறு, காலதாமதத்தை தவிர்க்கும் வகையில் நாளை (20ந் தேதி) முதல் சபரிமலையில் மகரஜோதி தரிசன தினம் வரை தேனி மாவட்டம் வழியாக செல்லும் வாகனங்களுக்கு ஒருவழிப்பாதை அமல்படுத்தப்படுகிறது.

    அதன்படி சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்களின் வாகனங்கள் கம்பம், கம்பம் மெட்டு வழியாக சபரிமலைக்கு செல்ல வேண்டும். தரிசனம் முடிந்து திரும்பும் பக்தர்கள் வாகனங்கள் குமுளி, கூடலூர், கம்பம் வழியாக செல்லும்மாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து அறிவிப்பு பலகை கம்பத்தில் போலீசார் சார்பில் வைக்கப்பட்டுள்ளது. எனவே அய்யப்ப பக்தர்கள் வாகனங்கள் அதன்படி சென்று வர வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

    • கார்த்திகை நட்சத்திரத்தன்று முருகப் பெருமானை வழிபடுவது சிறந்தது.
    • ஒவ்வொரு துளசி இலைகளுக்கும் ஒவ்வொரு அசுவமேதயாகம் செய்த பலனை அடைவார்கள்.

    1. கார்த்திகை மாதத்தில் சிவலிங்கத்தை நெய்யினால் அபிஷேகம் செய்து வில்வம் மற்றும் மரிக்கொழுந்தால் அர்ச்சனை செய்து வழிபட்டால் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்.

    2. விருச்சிக ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் இம்மாதத்தில் மனசேர்க்கை, உடல் சேர்க்கை, கர்ப்பதானம் ஆகிய இவற்றில் பிரச்சினைகள் வராது.

    எனவே, கார்த்திகை மாதத்தைத் திருமண மாதம் என்று இந்து சாஸ்திரம் கூறுகிறது.

    3. கார்த்திகை மாதத்தில் நாள்தோறும் சூரிய உதயத்தின் போது நீராடுபவர்கள், சகல புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடிய புண்ணிய பலனை அடைவார்கள்.

    4. விஷ்ணு பகவானை கார்த்திகை மாதத்தில் புஷ்பங்களால் அர்ச்சித்து பூஜை செய்பவர்கள் தேவர்களும் அடைய அரிதான மோட்ச நிலையை அடைவார்கள்.

    5. கார்த்திகை மாதத்தில் விஷ்ணு பகவானை துளசி இலையால் அர்ச்சனை செய்பவர்கள் பகவானுக்கு சமர்ப்பிக்கும்

    ஒவ்வொரு துளசி இலைகளுக்கும் ஒவ்வொரு அசுவமேதயாகம் செய்த பலனை அடைவார்கள்.

    6. கார்த்திகை மாதத்தில் விளக்கு தானம் செய்பவர்கள் பிரம்ம ஹத்தி முதலான தோஷங்களிலிருந்தும் விடுபடுவார்கள்.

    7. கார்த்திகை மாதத்தில் மது, மாமிசம் முதலானவைகளை ஒழித்து விரதம் அனுஷ்டிப்பவர் சகல பாவங்களிலிருந்தும் விடுபட்டு விஷ்ணு பாதத்தை அடைவார்கள்.

    கார்த்திகை மாதத்தில் மாமிச ஆகாரத்தைக் கைவிடாதவர்கள் புழுப் பூச்சிகளாய் பிறவி எடுப்பார்கள் என்று பத்மபுராணம் கூறுகிறது.

    8. முருகப் பெருமானுக்கு இரண்டு நட்சத்திரங்கள் உகந்தவையாகும்.

    ஒன்று விசாக நட்சத்திரமும், மற்றொன்று கார்த்திகை நட்சத்திரமும்தான்.

    வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தன்று பிறந்தவர் ஆகையால் விசாக நட்சத்திரம் முருகக் கடவுளுக்குரியதாயிற்று.

    சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து தீப்பொறிகளாகத் தோன்றி சரவணப் பொய்கையில்

    குழந்தையாய் தவழ்ந்த முருகனை கார்த்திகைப் பெண்கள் எடுத்து வளர்த்ததால் கார்த்திகையும் முருகனுக்குரிய நட்சத்திரமாயிற்று.

    9. கார்த்திகை திங்களில் பவுர்ணமியோடு கூடி வரும் கார்த்திகை நட்சத்திரம் முருக வழிபாட்டிற்கேற்ற ஒன்றாகும்.

    கார்த்திகைத் தீபத் திருநாளன்று திபங்கள் ஏற்றி முருகனை வழிபடுவது சிறந்தது.

    10. கார்த்திகை பவுர்ணமியன்று பூமிக்கு மிக அருகில் சந்திரன் வருகிறது. அன்றைய தினம் சிவசக்தி சமேதராய், பூமிக்கு மிக அருகே வந்து இறைவனும் இறைவியும் அருள்பாலிக்கின்றனர்.

    11. கார்த்திகை, திருவோணம் ஆகிய இரு நட்சத்திரங்களும் நல்ல நட்சத்திர சக்தி தருவதால் இந்த நட்சத்திரம் வரும் நாட்களில் விரதங்கள் இருக்க வேண்டும் என்றுஇந்து மதம் கூறுகிறது.

    12. கார்த்திகை மாதத்தில் ஆலயங்களில் திபம் ஏற்றி வைப்பதும், இல்லத்தில் இரு வேளைகளில் விளக்கேற்றுவதும் எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வை ஒளிமயமாக்கும்.

    13. கார்த்திகை மாதம் தினமும் விளக்கேற்ற இயலாதவர்கள் துவாதசி, சதுர்த்தசி, பவுர்ணமி ஆகிய மூன்று தினங்களில் மட்டுமாவது கண்டிப்பாக தீபம் ஏற்ற வேண்டும்.

    14. கார்த்திகை மாதத்தின் தொடக்கத்திலும், முடிவிலுமாக இரு நாட்களில் கார்த்திகை நட்சத்திரம் வருமானால் இரண்டாவதாக வரும் நாளில் கொண்டாடுவது மரபு.

    15. கார்த்திகைகளில் முருகப் பெருமானுக்கு சந்தனம் அபிஷேகம் செய்து வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

    16. வெண்கலம் அல்லது வெள்ளி விளக்கில் நெய்யிட்டு,தீப ஒளியுடன் வேதம் அறிந்த விற்பன்னருக்கு தானம் அளித்தால், இல்லத்தில் தடைப்பட்ட சுப காரியங்கள் மகிழ்வுடன் நிறைவேறும்.

    17. கார்த்திகை மாத முதல் நாளில் காவேரியில் நீராடினார், ஐப்பசி மாதத்தில் நீராடும் துலா ஸ்நானப் பலனை இந்த ஒரே நாளில் பெற முடியும்.

    18. கார்த்திகை பவுர்ணமி அன்று கிரிவலம் வருவது மிகவும் சிறப்பிக்கப்படுகிறது.

    19. கார்த்திகையில் கிரிவலம் வரும்பொழுது மழை பெய்ய நேரிட்டால், அந்த மழையில் நனைந்தால் தேவர்களின் ஆசி கிட்டும்.

    20. திருவண்ணாமலையை கார்த்திகைப் பவுர்ணமி அன்று தேவர்களும், ரிஷிகளும், முனிவர்களும் வலம் வந்திருக்கிறார்கள்.

    இந்திரன், வருணன், வாயு, குபேரன், யமன் ஆகியோரும் வலம் வந்திருக்கிறார்கள்.

    மகா விஷ்ணு மகா லட்சுமியுடன் வலம் வந்திருப்பதாகப் புராணங்கள் கூறுகின்றன.

    21. கார்த்திகை மாதத்தில் ஏகாதசிக்கு அடுத்த நாள் துளசி தேவியை மகாவிஷ்ணு மணந்ததாகப் புராணம் சொல்கிறது.

    மகாவிஷ்ணு நெல்லி மரமாகத் தோன்றியவர் என்பதால், கார்த்திகை ஏகாதசி அன்று துளசிச் செடியுடன், நெல்லி மரத்தடியில் பூஜை செய்ய வேண்டும்.

    நெல்லி மரம் இல்லாத பட்சத்தில் வீட்டில் உள்ள துளசி மாடத்தில் நெல்லி மரத்தின் ஒரு சிறிய கிளையை வைத்துப் பூஜித்து துளசி கல்யாணம் செய்தால் திருமணமாகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும்.

    22. கார்த்திகை ஞாயிறு மிகவும் போற்றப்படுகிறது. இதனால் யமவாதனை யமபயம் நீங்கும்.

    23. கார்த்திகை மாதத்தில் பவுர்ணமியும் கூடிவரும் கார்த்திகை நட்சத்திரத்தன்று முருகப் பெருமானை வழிபடுவது சிறந்தது.

    அந்த நாளில் முருகன் சந்நிதியில் தீபங்கள் ஏற்றி வழிபட சகல பாக்கியங்களையும் பெறலாம்.

    24. கார்த்திகை மாத திங்கட்கிழமையில் திருக்குற்றாலத்தில் நீராடி, குற்றாலநாதரையும், அன்னை குழல்வாய்மொழி அம்மையையும் வழிபாடு செய்தால் பாவங்கள் அழியும்.

    25. ஸ்ரீரங்கத்தில் பெருமாள் சக்கரத்தாழ்வார் சந்தியில் எழுந்தருளி, கார்த்திகைக் கோபுர வாசல் பக்கம் கட்டப்பட்டிருக்கும் சொக்கப்பனை ஏற்றப்படும் காட்சியைக் கண்டு மகிழ்வார்.

    • கோவில் உற்சவம் நிகழ்ச்சி நடைபெறும் போது இந்தக் கொடி மரத்தில் கொடி ஏற்றுகிறார்கள்.
    • இங்கு கொடிமரம் சூட்சுமலிங்கமாகக் கருதப்படுகிறது.

    சபரிமலையில் 18ஆம் படி ஏறியவுடன் நம் கண்ணில் படுவது கொடிமரம் தான்.

    கோவில் உற்சவம் நிகழ்ச்சி நடைபெறும் போது இந்தக் கொடி மரத்தில் கொடி ஏற்றுகிறார்கள்.

    கொடி மரத்தின் உச்சியில் அய்யப்பனின் வாகனமான குதிரை சிறிய அளவில் உள்ளது.

    கொடிமரத்தின் வலதுபுறம் கற்பூர ஆழி உள்ளது.

    சபரிமலையில் கொடிமரத்தின் முன் வீழ்ந்து பக்தர்கள் அஷ்டாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும்.

    இங்கு கொடிமரம் சூட்சுமலிங்கமாகக் கருதப்படுகிறது.

    இக்கொடி மரத்தின் அடிப்பாகம் பிரம்மபாகம், அதன் நீண்ட பாகம் விஷ்ணுவைக் குறிக்கும்.

    எனவே சபரிமலை ஆலய கொடிமரம் மும் மூர்த்திகளை குறிக்கிறது.

    • மஞ்ச மாதாவிற்கு மஞ்சள் பொடி தூவியும், தேங்காயை உருட்டியும் வழிபாடு செய்து அருள் பெறுகின்றனர்.
    • சிலர் ரவிக்கைத்துண்டு வைத்தும் வெடி வழிபாடு செய்தும் வணங்குவதுண்டு.

    மகிஷி என்ற அரக்கியை மணிகண்டன் காட்டில் வதம் செய்த உடனே அந்த மகிஷியின் உடலில் இருந்து லீலா என்ற

    தேவதை போன்ற அழகிய பெண் வெளிவந்து அய்யப்பனை வணங்கி

    "நான் உங்கள் மூலம் சாப விமோசனம் அடைந்தேன்.

    என் சாபம் நீங்குவதற்குக் காரணமாக இருந்த நீங்களே என் கணவராக வேண்டும்.

    என்னை நீங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள்" என வேண்டினாள்.

    மணிகண்டனாகிய அய்யப்பன் அவளிடம் "நான் இந்த ஜென்மம் முழுவதும் பிரம்மச்சாரியாய் இருப்பதாக சத்தியப்பிரமாணம் செய்துள்ளேன்.

    எனவே உன்னை ஏற்க இயலாது" என்று கூறி அவளது வேண்டுகோளை நிராகரித்தார்.

    அதோடு அந்தப் பெண்மணியை சபரிமலையில் பிரதிஷ்டை செய்யப்படும் கோவிலில்

    மாளிகைப்புறத்தம்மா என்ற பெயரில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்புரிய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

    அதன்படி பக்தர்கள் மாளிகைப் புறத்தம்மன் எனக் கூறப்படும் மஞ்ச மாதாவிற்கு மஞ்சள் பொடி தூவியும்,

    தேங்காயை உருட்டியும் வழிபாடு செய்து அருள் பெறுகின்றனர்.

    சிலர் ரவிக்கைத்துண்டு வைத்தும் வெடி வழிபாடு செய்தும் வணங்குவதுண்டு.

    திருமணம் கை கூடுவதற்காக சிலர் இரண்டு ஜாக்கெட் துண்டு கொடுத்து ஒன்றைத்திரும்ப வீட்டிற்கு எடுத்து செல்கின்றனர்.

    • கடுத்த சுவாமிக்கு மாளிகைப் புறத்தம்மை கோவிலில் பிரதிஷ்டை உண்டு.
    • கருப்ப சுவாமிக்கு முந்திரி, திராட்சை ஆகியவை படைத்து கற்பூரம் காட்டி வழிபாடு செய்யலாம்.

    அய்யப்பனுடைய படையில் சிறந்த சேனாதிபதியாகவும், பிரதான வீரராகவும் கடுத்த சுவாமி திகழ்ந்தார் என்று சொல்வார்கள்.

    மேலும் பந்தள ராஜாவிற்காக யுத்தங்களில் வென்று வாகை சூடியதாக கடுத்தசுவாமி பற்றி கூறப்படுகிறது.

    கடுத்த சுவாமிக்கு மாளிகைப் புறத்தம்மை கோவிலில் பிரதிஷ்டை உண்டு.

    இவருக்குப் பொரி, அவல், மிளகு,பழம் நைவேத்தியமாக படைக்கிறார்கள்.

    பதினெட்டுப் படிக்குக் கீழேயும் இவர் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறார்.

    கடுத்த சுவாமிக்கு சிலர் சுருட்டும் காணிக்கையாக வைக்கின்றனர்.

    பதினெட்டாம் படிக்குத் தொட்டது போல் வடக்கு பக்கத்தில் கருப்பசாமி பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறார்.

    கருப்ப சுவாமிக்கு முந்திரி, திராட்சை ஆகியவை படைத்து கற்பூரம் காட்டி வழிபாடு செய்யலாம்.

    • மதிய பூஜைக்கு பொதுவாக இடித்து பிழிந்த பாயாசமே நைவேத்தியம்.
    • உதயாஸ்தமன பூஜை வேளையில் நண்பகலுக்கு முன்பு 15 பூஜைகள் நடைபெறும்.

    அதிகாலை பூஜைக்கு அஷ்டாபிஷேகம், விபூதி, பால், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், சந்தனம், பன்னீர்,தூய நீர்

    போன்ற எட்டு பொருட்களால் அபிஷேகம் செய்து திருமதுரம்

    (பழம் மற்றும் தேன், சர்க்கரை சேர்த்த கலவை) நைவேத்தியம் செய்வர்.

    பிற்பாடு நெய் அபிஷேகம்.

    மதிய பூஜைக்கு பொதுவாக இடித்து பிழிந்த பாயாசமே நைவேத்தியம்.

    (இடித்துப் பிழிந்தெடுத்த தேங்காய்ப்பாலுடன் கதலிப்பழம், சர்க்கரை, சம்பா பச்சரிசி, சுக்கு, நெய் போன்றவற்றை சேர்த்து தயாரிக்கப்படுவது. மகா நைவேத்தியம் எனப்படும்.)

    உதயாஸ்தமன பூஜை வேளையில் நண்பகலுக்கு முன்பு 15 பூஜைகள் நடைபெறும்.

    அவை அனைத்திலுமே இடித்துப் பிழிந்த பாயாசமே நைவேத்தியமாகப் படைக்கப்படும்.

    இருபத்தியைந்து கலசங்களுடன் மதிய பூஜை நடைபெறும்.

    • நெற்றியில் பொட்டு வைக்குமிடத்தில் பிட்யூட்டரி எனும் சுரப்பி உள்ளது.
    • இது ஆன்மா இருக்குமிடம் என்று கருதுவதால் இதை மனோன்மணி என்று அழைக்கிறார்கள்.

    அய்யப்ப பக்தர்கள் சபரிமலைக்கு செல்வதற்காக மாலை அணிந்தவுடன் புருவமத்தியில் சந்தனத்தை வைத்துக்கொள்ள வேண்டும்.

    சந்தனத்தை நெற்றியில் பார்த்ததுமே இவர் மாலை அணிந்த சாமி என்று மற்ற அய்யப்ப சாமிகள் தெரிந்து கொள்வார்கள்.

    நெற்றியில் பொட்டு வைக்குமிடத்தில் பிட்யூட்டரி எனும் சுரப்பி உள்ளது.

    பீனியல் சுரப்பி நெற்றிக் கண்ணைப் போலவே செயல்படுகிறது.

    அதன் அமைப்பும் ஒரு கண்ணைப் போன்றே இருக்கும்.

    இது உடலையும், உள்ளத்தையும் இணைக்கும் பாலமாக செயல்படுகிறது.

    வெளிப்புறம் நடக்கும் அனைத்தையும் அறிந்து கொள்ளக்கூடியது இச்சுரப்பி.

    இது ஆன்மா இருக்குமிடம் என்று கருதுவதால் இதை மனோன்மணி என்று அழைக்கிறார்கள்.

    இது சிறப்பாக இயங்கினால் ஞானதிருஷ்டி சித்திக்கும். இதை குண்டலினி யோகம் மூலம் தான் தூண்ட முடியும்.

    • சபரிமலை கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் இன்று முதல் விரதம் மேற்கொள்வார்கள்.
    • திருச்செந்தூர் தூண்டுகை விநாயகர் கோவிலில் பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.

    திருச்செந்தூர்:

    கார்த்திகை முதல் நாளான இன்று சபரிமலைக்கு விரதம் மேற்கொண்டு கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் இன்று முதல் விரதம் மேற்கொள்வார்கள்.

    அந்த வகையில் திருச்செந்தூர் சுற்று வட்டாரங்களில் உள்ள அய்யப்ப பக்தர்கள் ஏராளமானோர் இன்று காலையில் திருச்செந்தூர் தூண்டுகை விநாயகர் கோவிலில் வைத்து திருச்செந்தூர் அய்யப்பா சேவா சங்க குருசாமி சந்தானம் தலைமையில் பக்தர்கள் சிறப்பு பூஜைகள் நடத்தி மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.

    இதே போல் அகில பாரத அய்யப்பா சேவா சங்க திருச்செந்தூர் ஒருங்கிணைப்பாளர் அஜித் குமார் தலைமையில் ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூர் ரெயிலடி ஆனந்த விநாயகர் கோவிலில் மாலை அணிந்து விரதம் மேற்கொண்டனர்.

    • சபரிமலை மண்டல பூஜை, மகரவிளக்கு சீசன் தொடங்குவதால் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அய்யப்ப பக்தர்கள் கோவிலுக்கு செல்கின்றனர்.
    • வனப்பகுதி வழியாக செல்லும் அய்யப்ப பக்தர்களுக்கு இடுக்கி மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

    கூடலூர்:

    கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வரு கின்றனர். பெரும்பாலான பக்தர்கள் தமிழகம் வழியாகவே கோவிலுக்கு சென்று வருகின்றனர். இதனால் தமிழக அரசு சார்பில் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.

    நாளை கார்த்திகை மாத பிறப்பையொட்டி இன்று சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடை திறக்கப்பட்டுள்ளது. மேலும் மண்டல பூஜை, மகரவிளக்கு சீசன் தொடங்குவதால் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அய்யப்ப பக்தர்கள் கோவிலுக்கு செல்கின்றனர்.

    வனப்பகுதி வழியாக செல்லும் அய்யப்ப பக்தர்களுக்கு இடுக்கி மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி சத்திரம் வழியாக காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரையிலும், அழுதகடவு வழியாக காலை 7 மணி முதல் மதியம் 2.30 மணி வரையிலும் முக்குழி வழியாக காலை 7 மணி முதல் மதியம் 3.30 மணி வரையிலும் பக்தர்கள் சபரிமலைக்கு செல்லலாம். அங்கிருந்து சத்திரத்துக்கு திரும்ப காலை 9 மணி முதல் முதல் 11 மணி வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

    சபரிமலை சீசனை யொட்டி பல்வேறு ஓட்டல்கள், பேக்கரிகள் செயல்பட்டு வருகிறது. இந்த கடைகளில் விலை நிர்ணயம் செய்யுமாறு அதிகாரிகளுக்கு இடுக்கி மாவட்ட கலெக்டர் ஷீபா ஜார்ஜ் உத்தரவிட்டு ள்ளார்.

    பத்தினம்திட்டா, கோட்ட யம் மாவட்டங்களில் உணவு வகைகளின் தரம், அளவு ஆகியவற்றை கணக்கிட்டு அதற்கேற்ப விலை நிர்ணயம் செய்து கொள்ள அறிவிக்கப்பட்டுள்ளது.

    • கோவில் நடை மீண்டும் ஆகஸ்டு 9-ந்தேதி திறக்கப்படும்.
    • 10-ந் தேதி நிறைபுத்தரிசி சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் நடைபெறும்.

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் நடை திறக்கப்பட்டு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை நடைபெறும். இதுதவிர ஒவ்வொரு மலையாள மாதத்தின் (நிகரான தமிழ் மாதம்) முதல் 5 நாட்களிலும் விஷு, ஓணம் பண்டிகை, பங்குனி உத்திரம் திருவிழா நாட்களிலும் கோவில் நடை திறக்கப்பட்டு பல்வேறு பூஜைகள் நடைபெறும். இந்த நாட்களில் சபரிமலைக்கு திரளான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.

    இந்தநிலையில் ஆடி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை நேற்று மாலையில் திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி தீபாராதனை நடத்தினார். தொடர்ந்து கற்பூர ஆழியில் தீபம் ஏற்றப்பட்டது. பின்னர் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு 18-ம் படி வழியாக அனுமதிக்கப்பட்டனர். நேற்று மற்ற சிறப்பு பூஜைகள் நடைபெறவில்லை. மாத பிறப்பையொட்டி கோவில் கருவறை மற்றும் சன்னிதான சுற்றுப்புற பகுதிகள் சுத்தம் செய்யும் பணிகள் நடந்தது.

    இன்று (திங்கட்கிழமை) முதல் 21-ந் தேதி வரை 5 நாட்கள் கோவிலில் வழக்கமான நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், களபாபிஷேகம், சகஸ்ரகலசாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை போன்றவை நடைபெறும்.

    21-ந் தேதி அத்தாழ பூஜைக்கு பிறகு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு, இரவு 10 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும்.

    ஆடிமாத பூஜையில் பக்தர்கள் வழக்கம் போல் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். பக்தர்களின் வசதிக்காக நிலக்கல்லில் உடனடி தரிசனத்திற்கான முன்பதிவு நடைபெறும் என்று திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்து உள்ளது.

    மேலும் கேரள அரசு போக்குவரத்து கழகம் சார்பில் திருவனந்தபுரம், கோட்டயம், செங்கன்னூர், பத்தனம்திட்டை, கொட்டாரக்கரை, எர்ணாகுளம் உள்பட மாநிலத்தின் பல்வேறு இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    நிறைபுத்தரிசி பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மீண்டும் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 9-ந் தேதி மாலையில் திறக்கப்படும். 10-ந் தேதி நிறைபுத்தரிசி சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் நடைபெறும்.

    • 21-ந்தேதி இரவு 10 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும்.
    • ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டு தோறும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடை பெறும். இதுதவிர ஒவ்வொரு மலையாள மாதத்தின் (நிகரான தமிழ் மாதத்தின்) முதல் 5 நாட்களிலும், விஷு, ஓணம் பண்டிகை, பங்குனி உத்திரம் திருவிழா நாட்களிலும் நடை திறக்கப்படும். அதன்படி ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில், மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி தீபாராதனை நடத்துவார்.

    தொடர்ந்து கற்பூர ஆழியில் தீபம் ஏற்றப்படும். பின்னர் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு 18-ம் படி வழியாக சன்னிதானத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். அன்றைய தினம் மற்ற சிறப்பு பூஜைகள் நடைபெறாது. ஆடி மாத பிறப்பையொட்டி கோவில் கருவறை மற்றும் சன்னிதான சுற்றுப்புற பகுதிகள் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெறும்.

    17-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை 5 நாட்கள் கோவிலில் வழக்கமான நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷபூஜை, உச்சபூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், களபாபிஷேகம், சகஸ் ரகலசாபிஷேகம், படிபூஜை, உதயாஸ்தமன பூஜை ஆகியவை நடைபெறும்.

    21-ந்தேதி அத்தாழ பூஜைக்கு பிறகு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு இரவு 10 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும். ஆடி மாத பூஜையையொட்டி பக்தர்கள் வழக்கம் போல் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். இதற்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது. பக்தர்களின் வசதிக்காக நிலக்கல்லில் உடனடி தரிசனத்திற்கான முன்பதிவு நடைபெறும் என்று திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

    சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக திருவனந்தபுரம், கோட்டயம், செங்கன்னூர், பத்தனம் திட்டை, கொட்டாரக்கரை, எர்ணாகுளம் உள்பட மாநிலத்தின் பல்வேறு இடங்களில் இருந்து கேரள அரசு போக்குவரத்துகழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    நிறை புத்தரிசி பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மீண்டும் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 9-ந்தேதி மாலையில் திறக்கப்படும். 10-ந்தேதி நிறை புத்தரிசி சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் நடைபெறும்.

    • 17-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை வழக்கமான பூஜைகள் நடைபெறும்.
    • 21-ந்தேதி அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு கோவில் நடை அடைக்கப்படும்.

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டு தோறும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடை பெறும். இதுதவிர ஒவ்வொரு மலையாள மாதத்தின் (நிகரான தமிழ் மாதத்தின்) முதல் 5 நாட்களிலும், விஷு, ஓணம் பண்டிகை, பங்குனி உத்திரம் திருவிழா நாட்களிலும் நடை திறக்கப்படும். அதன்படி ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில், மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி தீபாராதனை நடத்துவார்.

    தொடர்ந்து கற்பூர ஆழியில் தீபம் ஏற்றப்படும். பின்னர் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு 18-ம் படி வழியாக சன்னிதானத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். அன்றைய தினம் மற்ற சிறப்பு பூஜைகள் நடைபெறாது. ஆடி மாத பிறப்பையொட்டி கோவில் கருவறை மற்றும் சன்னிதான சுற்றுப்புற பகுதிகள் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெறும்.

    17-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை 5 நாட்கள் கோவிலில் வழக்கமான நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷபூஜை, உச்சபூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், களபாபிஷேகம், சகஸ் ரகலசாபிஷேகம், படிபூஜை, உதயாஸ்தமன பூஜை ஆகியவை நடைபெறும்.

    21-ந்தேதி அத்தாழ பூஜைக்கு பிறகு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு இரவு 10 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும். ஆடி மாத பூஜையையொட்டி பக்தர்கள் வழக்கம் போல் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். இதற்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது. பக்தர்களின் வசதிக்காக நிலக்கல்லில் உடனடி தரிசனத்திற்கான முன்பதிவு நடைபெறும் என்று திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

    சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக திருவனந்தபுரம், கோட்டயம், செங்கன்னூர், பத்தனம் திட்டை, கொட்டாரக்கரை, எர்ணாகுளம் உள்பட மாநிலத்தின் பல்வேறு இடங்களில் இருந்து கேரள அரசு போக்குவரத்துகழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    நிறை புத்தரிசி பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மீண்டும் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 9-ந்தேதி மாலையில் திறக்கப்படும். 10-ந்தேதி நிறை புத்தரிசி சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் நடைபெறும்.

    ×