search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thalayuthu"

    • ஆந்திரா மாநிலம் கடப்பா மாவட்டத்தை சேர்ந்த 5 பேர் கேரளா மாநிலம் சபரிமலைக்கு காரில் சென்றுள்ளனர்.
    • பின்னர் அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு நாகர்கோவில் வழியாக நான்கு வழிச்சாலையில் இன்று காலை மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

    நெல்லை:

    ஆந்திரா மாநிலம் கடப்பா மாவட்டத்தை சேர்ந்த 5 பேர் கேரளா மாநி லம் சபரிமலைக்கு காரில் சென்றுள்ளனர்.

    பின்னர் அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு நாகர்கோவில் வழியாக நான்கு வழிச்சாலையில் இன்று காலை மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது நெல்லையை அடுத்த தாழையூத்து அருகே வந்தபோது ரோட்டோர பள்ளத்தில் எதிர்பாராத விதமாக கார் கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்த தாழையூத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காரில் இடிபாட்டில் சிக்கி இருந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக தாழையூத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நெல்லையை அடுத்த தாழையூத்து துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை மறுநாள்(திங்கட்கிழமை) நடைபெற உள்ளது.
    • மானூர் வட்டாரம், தாழையூத்து, சேதுராயன்புதூர், ராஜவல்லிபுரம், ரஸ்தா, தச்சநல்லூர், தென்கலம் புதூர், நாஞ்சான்குளம், தென்கலம், மதவக்குறிச்சி உள்ளிட்ட இடங்களில் வருகிற 5-ந்தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

    நெல்லை:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்தின் நெல்லை கோட்ட கிராமப்புற செயற்பொறியாளர் ஜான் பிரிட்டோ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நெல்லையை அடுத்த தாழையூத்து துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை மறுநாள்(திங்கட்கிழமை) நடைபெற உள்ளது.

    இதனால் அதற்கு உட்பட்ட மானூர் வட்டாரம், தாழையூத்து, சேதுராயன்புதூர், ராஜவல்லிபுரம், ரஸ்தா, தச்சநல்லூர், தென்கலம் புதூர், நாஞ்சான்குளம், தென்கலம், மதவக்குறிச்சி உள்ளிட்ட இடங்களில் வருகிற 5-ந்தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    ×