ஆன்மிகம்
காவனூர் முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழா

காவனூர் முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழா

Published On 2021-08-06 05:47 GMT   |   Update On 2021-08-06 05:47 GMT
செங்கல்பட்டு காவனூர் முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட தேரில் முத்துமாரியம்மன் எழுந்தருளி அருள்பாலித்தார்.
செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஊராட்சி ஒன்றியம் காவனூர் முத்துமாரியம்மன் கோவில் தீ மிதி விழா ஊரடங்கு விதிகளை பின்பற்றி நடந்தது. இதையொட்டி கன்னியம்மன், கங்கையம்மன், முத்துமாரியம்மன், பிடாரி சிரமித்தாளம்மன், சக்திகரகம் வீதியுலா, கூழ்வார்த்தல் நடந்தது. நேற்று தேர் திருவிழா நடந்தது.

அலங்கரிக்கப்பட்ட தேரில் முத்துமாரியம்மன் எழுந்தருளி அருள் பாலித்தார். பக்தர்கள் பொங்கலிட்டு அம்மனை தரிசித்தனர். விழா ஏற்பாடுகளை காவனூர் கிராம மக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
Tags:    

Similar News