ஆன்மிகம்
அமிர்தகடேஸ்வரர் கோவிலில் பந்தக்கால் நடும் விழா

அமிர்தகடேஸ்வரர் கோவிலில் பந்தக்கால் நடும் விழா

Published On 2021-07-17 05:48 GMT   |   Update On 2021-07-17 05:48 GMT
திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு குடமுழுக்கு நடைபெற உள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு குடமுழுக்கு நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் மாசிலாமணி தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் பந்தக்கால் நடும் விழா நடந்தது.

இதனைத்தொடர்ந்து அஸ்திரயாக பூஜை செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் அமிர்தகடேஸ்வரர்-அபிராமி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனை நடைபெற்றது.

மேலும் கொரோனா தொற்றில் இருந்து பொதுமக்கள் நலமுடன் வாழ வேண்டி சிறப்பு யாக பூஜை நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.
Tags:    

Similar News