ஆன்மிகம்
பூதப்பாண்டி பூதலிங்கசாமி கோவில்

பூதப்பாண்டி பூதலிங்கசாமி கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த கோரிக்கை

Published On 2021-06-24 10:49 GMT   |   Update On 2021-06-24 10:49 GMT
பூதப்பாண்டியில் உள்ள பூதலிங்கசாமி கோவிலில் கும்பாபிஷேகம் நடத்தி 21 ஆண்டுகள் ஆகிறது. கோவிலில் பராமரிப்பு பணிகளை விரைந்து முடித்து கும்பாபிஷேக தேதியை அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

சுசீந்திரம் இந்து சமய அறநிலையத்துறை அலுவலரிடம் தோவாளை ஒன்றிய பா.ஜனதா பொதுச்செயலாளர் விஜய மணியன் தலைமையில் மனு கொடுக்கப்பட்டது.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- பூதப்பாண்டியில் உள்ள பூதலிங்கசாமி கோவிலில் கும்பாபிஷேகம் நடத்தி 21 ஆண்டுகள் ஆகிறது. கோவிலில் பராமரிப்பு பணிகளை விரைந்து முடித்து கும்பாபிஷேக தேதியை அறிவிக்க வேண்டும், திருக்கோவில் பாதுகாப்பிற்கு காவலர்களை நியமிக்க வேண்டும், மேலும் சமையலர்களையும் நியமிக்க வேண்டும். திருத்தேர் ஆபரணங்களை முறையாக பராமரிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

அப்போது, மாவட்ட பொறுப்பாளர் சிவகுமார், கிளைத் தலைவர் பரமசிவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News