ஆன்மிகம்
வைகாசி விசாகத்தை முன்னிட்டு பூலோகநாதர் கோவிலில் சிறப்பு பூஜை

வைகாசி விசாகத்தை முன்னிட்டு பூலோகநாதர் கோவிலில் சிறப்பு பூஜை

Published On 2021-05-26 03:20 GMT   |   Update On 2021-05-26 03:20 GMT
நெல்லிக்குப்பத்தில் உள்ள புவனாம்பிக்கை சமேத பூலோகநாதர் கோவிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு ஸ்ரீ பால முத்துக்குமாரசாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
நெல்லிக்குப்பத்தில் உள்ள புவனாம்பிக்கை சமேத பூலோகநாதர் கோவிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு நேற்று ஸ்ரீ பால முத்துக்குமாரசாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

பஞ்சாமிர்தம், பால், தயிர், பன்னீர் விபூதி சந்தனம் உள்ளிட்ட 27 விதமான அபிஷேக பொருட்களை கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பால முத்துக்குமார சாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்க மகா தீபாராதனை நடைபெற்றது.

தற்போது முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால் பக்தர்கள் அனுமதிக்கவில்லை. மேலும் பூஜைக்கான ஏற்பாடுகளை குமார், ஹரி பிரபோ செய்திருந்தனர்.
Tags:    

Similar News